சிஏஏ சட்டம் இயற்றியதற்கான காரணம் என்ன..? அமைச்சர் ஹர்தீப் சிங் புரி விளக்கம்...

ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் துன்புறுத்தப்படும் இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு உதவிடும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

சிஏஏ சட்டம் இயற்றியதற்கான காரணம் என்ன..? அமைச்சர் ஹர்தீப் சிங் புரி விளக்கம்...

ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அங்குள்ள ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் உள்ளிட்ட மத சிறுபான்மையினர் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர்களில் பலர் அங்கிருந்து இந்தியாவுக்கு வந்துள்ளனர்.

இத்தகையோருக்கு குடியுரிமை வழங்கும் வகையிலே சிஏஏ கொண்டுவரப்பட்டதாக மத்திய அமைச்சர் ஹர்திப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் நடக்கும் சமீபத்திய நிகழ்வுகளால் அங்குள்ள சீக்கிய மற்றும் இந்து மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.