ரயில்களில் இனி வை-ஃபை வசதி கிடையாது!

ரயில்களில் வை - ஃபை வசதி திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரயில்களில் இனி வை-ஃபை வசதி  கிடையாது!

ரயில்களில் வை - ஃபை வசதி திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரயில்களில் பயணிகளுக்கு இணையதள வசதியை வழங்குவதற்காக கடந்த 2019ஆம் ஆண்டு ரயில்களில் வை - ஃபை சேவையை வழங்க போவதாக அப்போதைய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்தார். அதன்படி முதல்கட்டமாக ஹவுரா ராஜ்தானே எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. தற்போது இந்த திட்டத்தை கைவிடுவதாக தற்போதைய மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக எதிர்கட்சிகளின் கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், வை - ஃபை தொழில்நுட்பம் அலைவரிசை கட்டணங்களின் வடிவத்தில் தொடர்ச்சியான செலவுகளை ஏற்படுத்துவதாகவும், இதனால் செலவு குறைந்ததாக இல்லை என்றும் தெரிவித்தார்.  மேலும், பயணிகளுக்கு இணைய அலைவரிசை கிடைப்பது போதுமானதாக இல்லை என குறிப்பிட்ட அவர், இதன் காரணமாக ரயில்களில் வை - ஃபை வசதி திட்டம் கைவிடப்படுவதாகவும் கூறினார்.