பெண்ணை தர தரவென இழுத்துச் சென்ற காவல்துறையினர்...

பெண்ணை தர தரவென இழுத்துச் சென்ற காவல்துறையினர்...

மத்திய பிரதேசம் | மொரேனாவில் பெண்களை போலீசார் இழுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜனவரி 3 ஆம் தேதி, இந்த சம்பவம் பாரி கா புரா கிராமத்தில் நடந்தது. இச்சம்பவம் நடந்தபோது, ​​ஒருவரிடம் விசாரணை நடத்த போலீசார் சென்று கொண்டிருந்தனர்.

உத்தியோகபூர்வ பணிக்கு இடையூறு விளைவித்த ஆண்கள் மற்றும் பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்களை இழுத்துச் சென்றதாக போலீசார் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

மொரேனாவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரைசிங் நர்வாரியா, போலீஸ் அதிகாரிகள் கிராமத்திற்கு விசாரணை நடத்த வந்ததாகத் தெரிவித்தார். இதுகுறித்து, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இதன் வீடியோவும் வைரலாகி வர, இந்திய பெண்களின் பாதுகாப்பு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என நெட்டிசன்கள் தங்களது வருத்தங்களைத் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் தான் தலைநகர் டெல்லியில் ஒரு பெண் காரில் சுமார் 13 கி. மீ இழுத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்ற நிலையில், இந்த சம்பவம் பெரும் பதற்றத்தைக் கிளப்பியுள்ளது என்றே சொல்லலாம்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | அதிகரிக்கும் குடும்ப வன்முறை வழக்குகள்....அதிகரிக்கிறதா ஆணாதிக்க மனநிலை!!!