”ரஜினியிடம் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசார் மன்னிப்பு கேட்க வேண்டும்” - சந்திரபாபு நாயுடு ட்வீட்!

”ரஜினியிடம் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசார் மன்னிப்பு கேட்க வேண்டும்” - சந்திரபாபு நாயுடு ட்வீட்!

நடிகர் ரஜினிகாந்திடம் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு டுவிட்டரில் தெரிவித்தள்ளார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அண்மையில் நடைபெற்ற என்.டி. ராமராவின் 100-வது பிறந்தநாள் விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது 2047-ஆம் ஆண்டு ஆந்திரா எப்படி இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் சந்திரபாபு நாயுடு செயல்பட்டு வருகிறார் என பேசியிருந்தார்.

இதையும் படிக்க : ”தாண்டியா ஆட்டமும் ஆட...” - நடனமாடி மகிழ்ந்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்...!

ரஜினிகாந்தின் இந்த  பேச்சுக்கு ஆந்திர அமைச்சர் ரோஜா உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சந்திரபாபு நாயுடு தனது டுவிட்டர் பக்கத்தில், நடிகர் ரஜினிகாந்திடம் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார்.