முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவ் சிலையை உடைக்க முயன்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பிரமுகர் கைது.!!

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவ் சிலையை ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவர் உடைக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவ் சிலையை உடைக்க முயன்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பிரமுகர் கைது.!!

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவ் சிலையை ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவர் உடைக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குண்டூர் அருகேயுள்ள துர்க்கி பகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், ஆந்திர முன்னாள் முதலமைச்சருமான என்.டி. ராமராவின் பிரம்மாண்ட சிலை உள்ளது.

இந்த சிலையை, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் சம்மட்டியால் தாக்கி உடைக்க முயன்றார்.

இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில், சிலையை உடைக்க முயன்ற கோடீஸ்வர ராவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு தெலுங்கு தேசம் கட்சி  கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.