உ.பி-யில் மாபியா ராஜ்ஜியத்தை மட்டுமே உருவாக்கியதாக குற்றச்சாட்டு  

உத்தரபிரதேசத்தில், காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் மாபியா ராஜ்ஜியத்தை மட்டுமே உருவாக்கியதாக, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார்.

உ.பி-யில் மாபியா ராஜ்ஜியத்தை மட்டுமே உருவாக்கியதாக குற்றச்சாட்டு   

உத்தரபிரதேசத்தில், காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் மாபியா ராஜ்ஜியத்தை மட்டுமே உருவாக்கியதாக, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார்.

குஷிநகர் மாவட்டத்தில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித்திட்ட பணிகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், மாபியாக்களுக்கு அடைக்கலம் கொடுத்து, காங்கிரஸ் ராம பக்தர்களின் நம்பிக்கையை இழிவுப்படுத்திவிட்டதாக கூறினார். பாஜக ஆட்சியில் இருக்கும் வரை ஒவ்வொருக்கும் மரியாதை மற்றும் நம்பிக்கைக்கு மதிப்பளிக்கப்படும் என தெரிவித்தார்.

காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் உத்தரபிரதேசத்தில் நோய், வேலையின்மை, ஊழல், மாபியா ராஜ்ஜியத்தை மட்டுமே உருவாக்கியதாக அப்போது அவர் கூறினார்.