இன்று முதல் விடுமுறை நாட்களிலும் ஊதியம் பெறலாம்!

விடுமுறை நாட்களிலும் வங்கி கணக்குகளில் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவதற்கும், இ.எம்.ஐ. செலுத்துவதற்குமான நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இன்று முதல் விடுமுறை நாட்களிலும் ஊதியம் பெறலாம்!

விடுமுறை நாட்களிலும் வங்கி கணக்குகளில் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவதற்கும், இ.எம்.ஐ. செலுத்துவதற்குமான நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

வங்கிகளின் வாயிலாக நடைபெறும் பணப் பரிமாற்றங்களுக்கு, விடுமுறை நாட்களில் அனுமதி இல்லாமல் இருந்தது. இதனால், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு வேலை நாட்களில் மட்டுமே ஊதியத்தை கிரெடிட் செய்து வந்தது. இதனை மாற்றும் வகையில், இன்று முதல் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரம் பணப்பரிமாற்றம் செய்யும் வகையில் தானியங்கி கிளியரிங் ஹவுஸ் எனப்படும் முறை அறிமுகமாகிறது.

இந்த நடைமுறையின் மூலம் வங்கி விடுமுறை நாட்களிலும் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை வாடிக்கையாளர்கள் தங்களின் கணக்குகளில் பெற முடியும். மேலும், வங்கி கடன்களுக்கான இ.எம்.ஐ தொகையையும் விடுமுறை நாட்களில் செலுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.