முகமது ஜுபைர்க்கு பிணை வழங்கியது நீதிமன்றம்

முகமது ஜுபைர்க்கு பிணை வழங்கியது நீதிமன்றம்

ஆல்ட் நியூஸ்  இணை நிறுவனர் முகமது ஜுபைர் கடந்த 2018 ஆம் ஆண்டு ட்வீட் செய்த கருத்துக்காக தொடரப்பட்ட வழக்கில் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தின் செஷன்ஸ் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை பிணை வழங்கியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.குறிப்பிட்ட மதத்தை புண்படுத்தும் விதமாக அவர் கருத்து தெரிவித்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி ஜுபைர் நாட்டை விட்டு வெளியேற முடியாது என அந்த பிணை ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 50,000  மதிப்புள்ள பிணை பத்திரம் செலுத்தி  தனது சொந்த பிணையில் செல்ல நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.