இன்று முதல் மதுக்கடைகள் திறப்பு.. மதுபிரியர்கள் உற்சாகம்...

இன்று முதல் மதுக்கடைகள் திறப்பு.. மதுபிரியர்கள் உற்சாகம்...

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜுன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மதுகடைகள் இன்று முதல் திறக்கப்பட உள்ளது. புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த நிலையில் தற்போது கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கானது ஜுன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும் இன்று முதல் காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 5 வரை இயங்கலாம் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இதனால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே சமூக இடைவெளி, முககவசம் போன்ற கட்டுப்பாட்டு விதிகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்று மதுகடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. புதுச்சேரியில் இன்று முதல் அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.