பாமக மாவட்ட செயலாளர் படுகொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்..  

காரைக்காலில் பாமக மாவட்ட செயலாளர் தேவமணி படுகொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என ஜிகே மணி வலியுறுத்தி உள்ளார்.

பாமக மாவட்ட செயலாளர் படுகொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்..   

காரைக்காலில் பாமக மாவட்ட செயலாளர் தேவமணி படுகொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என ஜிகே மணி வலியுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் தேவமணி   மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்தநிலையில் திருநள்ளாறில் உள்ள தேவமணி குடும்பத்தினரை அக்கட்சி தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜிகே மணி, தேவமணி படுகொலை வழக்கில் உண்மையை கண்டறிய சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.