பஞ்சாப் தேர்தலில் சித்து-வை தோற்கடிக்க வலிமையான வேட்பாளரை நிறுத்துவேன் - அமரிந்தர் சிங் சவால்
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் நவ்ஜோத் சிங் சித்து-வை தோற்கடிக்கும் அளவுக்கு வலிமையான வேட்பாளரை நிறுத்துவேன் என அம்மாநில முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் நவ்ஜோத் சிங் சித்து-வை தோற்கடிக்கும் அளவுக்கு வலிமையான வேட்பாளரை நிறுத்துவேன் என அம்மாநில முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநில ஆளும் காங்கிரசில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக, அமரிந்தர் சிங், முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார். மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவின் ஆதரவாளர் சரண்ஜித்சிங் சன்னி, புதிய முதல்வராக பதவியேற்றுக் கொண்டுள்ளார்.இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமரிந்தர் சிங், ராகுல் காந்தியும், பிரியங்காவும் தன் பிள்ளைகளை போன்றவர்கள். அவர்கள் அனுபவம் இல்லாதவர்கள். ஆலோசகர்கள் அவர்களை தவறாக வழிநடத்துகிறார்கள் என்று கூறினார். வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரசை மீண்டும் வெற்றிபெற செய்துவிட்டு, வேறு யாரையாவது முதலமைச்சராக்க வழிவிடுவதாக சோனியாவிடம் தெரிவித்ததாகவும், ஆனால் அது எடுபடவில்லை என்றும் கூறினார்.