இன்று முதல் தியேட்டர்கள் திறப்பு!

புதுச்சேரியில் மூன்று மாதங்களுக்கு பிறகு இன்று திரையரங்குகள் திறக்கப்படுகின்றது.

இன்று முதல் தியேட்டர்கள் திறப்பு!

புதுச்சேரியில் மூன்று மாதங்களுக்கு பிறகு இன்று திரையரங்குகள் திறக்கப்படுகின்றது.

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பொதுமுடக்க தளர்வுகளில் கடந்த1 ந்தேதி முதல் ஆகஸ்ட் 15 ந்தேதி வரை திரையங்குகள் இரவு 9 மணி செயல்பட அனுமதிக்கப்பட்டது. பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த 1ந்தேதி திறக்கப்படவிருந்த திரையரங்குகள் இன்று பிற்பகல் முதல் திறக்கப்பட்டு காட்சிகள் திரையிடப்படவுள்ளது.

புதிய படங்கள் ஏதும் இல்லாததால் ஆங்கிலம், பிறமொழி டப்பிங்க் மற்றும் பழைய படங்களை திரையிடப்படவுள்ளது. பல மாதங்களுக்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்படுவதால் அதிகளவில் ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தியேட்டர் உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.