டிவிட்டர் - இந்திய அரசு இடையேயான வழக்கு...கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கவா?

டிவிட்டர் - இந்திய அரசு இடையேயான வழக்கு...கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கவா?

அரசியல் கட்சிகள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட ட்விட்டர் கணக்குகளில் உள்ள சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்க வேண்டும் என தங்களுக்கு உத்தரவிட்டுள்ள இந்திய அரசு, அதனை பரிசீலனை செய்ய வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ட்விட்டர் இந்தியா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

அமெரிக்கச் சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர், நீதித்துறையை நாடியிருப்பது, ட்விட்டர் பதிவுகள் தொடர்பாக இந்திய பாஜக அரசுடன் வளர்ந்து வரும் மோதலின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. அரசாங்கத்திற்கு எதிரான விவசாயிகள் போராட்டங்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட சில பதிவுகளை நீக்குமாறு இந்திய அரசு பிறப்பித்த உத்தரவை ட்விட்டர் நிறுவனம் கடைப்பிடிக்கத் தவறியதால் ட்விட்டருக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே மோதல் வெடித்ததாகக் கூறப்படுகிறது.

இந்திய அரசு 1,474 டிவிட்டர் கணக்குகள் மற்றும் 175 ட்வீட்களை நீக்கச் சொல்லப்பட்டதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. தவறான தகவல்களைத் தடுக்க தகவல் தொழில்நுட்பச் சட்டம் அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது, ஆனால் ட்விட்டரின் வழக்கு என்னவென்றால், அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது பற்றியது ஆகும்.

காலிஸ்தான் இயக்கத்திற்கு ஆதரவான கணக்குகள், விவசாயிகளின் போராட்டங்கள் குறித்த தகவல்களை பரப்பியதாகக் கூறப்படும் பதிவுகள், கொரோனா விடயத்தை அரசாங்கம் கையாள்வது குறித்து விமர்சிக்கும் ட்வீட்கள் உள்ளிட்ட பதிவுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் இந்திய அரசு ட்விட்டர் இந்தியா நிறுவனத்தை கடந்த ஆண்டு கேட்டுக் கொண்டது. ஆனால், சமூக ஊடக நிறுவனங்கள் சில பதிவுகளை தங்கள் தளங்களில் இருந்து அகற்றுவதற்கான இந்திய அரசின் உத்தரவுகளுக்கு டிவிட்டர் இணங்கவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அரசியல் கட்சிகள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட ட்விட்டர் கணக்குகளில் உள்ள சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்க வேண்டும் என தங்களுக்கு உத்தரவிட்டுள்ள இந்திய அரசு, அதனை பரிசீலனை செய்ய வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ட்விட்டர் இந்தியா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. ட்வீட்களை நீக்குவது பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தை அடியோடு பாதிக்கும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

ட்விட்டரின் வழக்கு குறித்து இந்திய அரசு கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், ட்விட்டரில் பதிவுகளை அகற்றும் கொள்கையை இந்திய அரசு ஆதரித்துள்ளது, சமூக ஊடக நிறுவனங்கள் இந்திய மக்களிம் அரசியலமைப்பு உரிமைகளை மீறியுள்ளதால் இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியம் என்று கூறியுள்ளது. இது ஒருபுறமிருக்க, தங்களது கொள்கைகளை மீறுவதாகக் கூறி, அரசியல்வாதிகள் உட்பட செல்வாக்கு மிக்க நபர்களின் கணக்குகளைத் தடுக்கும் ட்விட்டர் நிறுவனம் இந்தியாவில் பின்னடைவைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எனினும் டிவிட்டர் இந்தியா நிறுவனத்தால் தொடரப்பட்ட இந்த வழக்கு அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.