காஷ்மீரில் ஆயுதக் குழுவினர் 2 பேர் படுகொலை!

காஷ்மீரில் ஆயுதக் குழுவினர் 2 பேர் படுகொலை!

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் போஷ்க்ரீரி என்ற இடத்தில் ஆயுதக் குழுவினர் பதுங்கி இருப்பதாக இந்திய இராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் குறிப்பிட்ட இடத்தைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த ஆயுதக் குழுவினர் இந்திய படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இந்தியப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இரு தரப்பினருக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் ஆயுதக்குழுவினர் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து அங்கு ஆயுதக் குழுவினர் பதுங்கியுள்ளனரா என இந்திய இராணுவத்தினர் தேடி வருகின்றனர்.