இவருக்கெல்லாம் கோவிலா? அப்போ இங்க என்ன பிரசாதமா இருக்கும்?- பிரகாஷ் ராஜ்:

உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தநாத்திற்காக ஒரு கோவில் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் என்ன பிரசாதம் கொடுப்பார்கள் என, நடிகர் பிரகாஷ் ராஜ் கேலி செய்துள்ளது வைரலாகி வருகிறது.

இவருக்கெல்லாம் கோவிலா? அப்போ இங்க என்ன பிரசாதமா இருக்கும்?- பிரகாஷ் ராஜ்:

இந்தியா காணாத வரலாற்று சாதனையாக, உத்திர பிரதேசத்தில், தொடர்ந்து இரண்டு முறை பாஜக, அறியணை பிடித்ததைத் தாண்டி, ஏகோபத்தியமாக யோகி ஆதித்தநாத்தே முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்துத்துவா வைத்து ஆட்சி செய்து வரும் யோகிக்கு, பல ரசிகர்கள் அரசியல் ரீதியாகவும், கட்சி ரீதியாகவும், மக்கள் மத்தியிலும் உண்டு. இந்நிலையில், அவர் மீதான மரியாதை வெளிப்படுத்தும் வகையில், யோகி ஆதித்தநாத் பேரில் அம்மாநிலத்தில் ஒரு கோவிலே உருவாக்கப்பட்டுள்ளது.

கோவில் தாண்டி, அவரை கடவுள் ராமரின் அவதாரமாகவே பாவித்து அங்கு பூஜைகளும், புணஸ்காரங்களும் நடைபெற்று வருகிறது. ராமர் போலவே, கையில் அம்பு மற்றும் வில்லேந்தி நிற்கும் யோகியின் உருவம் ஆர்த்தி எடுக்கப்பட்டும் வருகிறது.

அயோத்தியில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள இந்த கோவிலை, பிரபாகர் மௌரியா என்பவர் கட்டியுள்ளார். அவர், யோகிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. மருரியா, தனது நண்பரின் உதவியோடு, இரண்டே மாதங்களில், யோகி போலவே தத்ரூபமாக சிலையை வடிவமைத்து கோவில் கட்டியுள்ளார்.

அயோத்தியில், ராமர் கோவிலை யார் கட்டுகிறாரோ, அவருக்கு நான் கோவில் கட்டுவேன் என முனைப்போடு இருந்த மௌரியா, கோவில் கட்டிய தனது முதலமைச்சருக்கு கோவில் கட்டியதால், பெருமை அடைவதாகக் கூறுகிறார்.

“யோகி மகாராஜின் உயரம் 5.4 அடி, எனவே நிறுவப்பட்ட சிலை பெரிதாக அவர் உயரத்திற்கே உள்ளது. சிலை மீதுள்ள ஆடைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. யோகி ஆதித்தநாத் அணியும் அதே உடைகள் இதில் உள்ளன” என்று மௌரியா கூறினார்.

இந்நிலையில், இது குறித்த செய்திகளைப் பகிர்ந்து, நடிகர் பிரகாஷ் ராஜ், கேலி செய்தது நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகிறது! தனது ட்விட்டர் பக்கத்தில், “கோவிலெல்லாம் சரி, அங்கு என்ன பிரசாதம் வழங்கப்படும்?” என நக்கலாக பதிவிட்ட நிலையில், நெட்டிசன்கள், “புள்டோசர்கள்” என்றும், “மாட்டு சானி” என்றும், “கத்தி, அறிவாள்” என்றும், ஒரு சிலர், “மாட்டு கோமியம்” என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகின்றனர். இது தற்போது படு வைரலாகி வருகிறது.