கிராமவாசியை துரத்தி சென்று தாக்கிய காட்டு யானை..!

படுகாயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதி..!

கிராமவாசியை துரத்தி சென்று தாக்கிய காட்டு யானை..!

அசாமில் கிராமவாசியை காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாக துரத்திச் சென்று தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதி தமர்ஹத். இப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்திற்குல் புகுந்த ஒற்றை காட்டு யானை, கிராமவாசி ஒருவரை ஆக்ரோஷமாக துரத்தி சென்று தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் அந்நபரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்ததுடன், யானையை அடர்ந்த காட்டு பகுதிக்குள் விரட்டினர். இதன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.