இந்தியாவின் மற்றோரு பதக்க வாய்ப்பும் தகர்ந்தது: குத்துச்சண்டையில் பூஜா ராணி தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் குத்துச்சண்டையில் 75 கிலோ பிரிவில் இந்தியாவின் பூஜா ராணி காலிறுதிச்சுற்றில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார்.

இந்தியாவின் மற்றோரு பதக்க வாய்ப்பும் தகர்ந்தது: குத்துச்சண்டையில் பூஜா ராணி தோல்வி

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் குத்து சண்டை காலிறுதிப்போட்டியில் அல்ஜீரியாவின் இச்ரக் சாயிப்பை எதிர்கொண்ட இந்தியாவில் பூஜா ராணி,5-0 என கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.தனது முதல் ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் பூஜா ராணி,இரண்டு முறை ஆசிய சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

 ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடிய லீ கியான், பூஜா ராணியை 5-0 என்கிற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். பூஜா ராணி இதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு நுழைந்திருந்தால் ஒலிம்பிக் பதக்கம் உறுதியாகியிருக்கும். எனினும் தனது முதல் ஒலிம்பிக்கில் பதக்கத்துக்கு அருகில் சென்ற பூஜா ராணிக்கு இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.