விம்பிள்டன் டென்னிஸ் தொடர்... சாம்பியன் பட்டத்தை வென்றார் ஆஷ்லே பார்டி...

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

விம்பிள்டன் டென்னிஸ் தொடர்... சாம்பியன் பட்டத்தை வென்றார் ஆஷ்லே பார்டி...
இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில்  உலகின் 'நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டியும், செக்குடியரசின் கரோலினா பிலிஸ்கோவாவும் மோதினர். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆறுக்கு மூன்று, ஆறுக்கு ஏழு, ஆறுக்கு மூன்று என்ற செட்களில்  பிளிஸ்கோவை வீழ்த்தி, ஆஷ்லே பார்டி சாம்பியன் பட்டத்தை வென்றார். 
 
கிராண்ட்ஸ்டாம் போட்டிகளில் ஆஷ்லே பார்டி பெறும் இரண்டாவது வெற்றி இதுவாகும்.   இந்நிலையில் இன்று நடைபெறும் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில்  நடப்பு சாம்பியனான ஜோகோவிச்சும், இத்தாலி வீரர் மேட்டியோ பெரெட்டினியும் மோத உள்ளனர்.