புதிய சாதனை படைத்த கிறிஸ் கெய்ல் : ரசிகர்கள் உற்சாகம்

டி20 கிரிக்கெட் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் படைத்துள்ளார்.

புதிய சாதனை படைத்த கிறிஸ் கெய்ல் : ரசிகர்கள் உற்சாகம்

டி20 கிரிக்கெட் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் படைத்துள்ளார். இதுவரை 431 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 14,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 67 ரன்கள் விளாசியபோது அவர், இந்த மைல்கல்லை எட்டினார். இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல், வெஸ்ட் இண்டீஸின் கரீபீயன் ப்ரீமியர் லீக், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 தொடர், பங்களாதேஷ் ப்ரீமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் மற்றும் சாம்பியன்ஸ் லீக் டிராபி உள்ளிட்ட பல்வேறு டி20 தொடர்களில் கிறிஸ் கெய்ல் விளையாடியுள்ளார். 37.55 சராசரியுடன், ஆயிரத்து 83 பவுண்டரிகள், ஆயிரத்து 28 சிக்சர்களுடன் இந்த சாதனையை கெய்ல் படைத்துள்ளார். அதே போல், 22 சதங்களையும் கெய்ல் அடித்துள்ளார்.