மாநில அளவிலான சைக்கிளிங் போட்டியில் கோவை முதலிடம்!

மாநில அளவிலான சைக்கிளிங் போட்டியில் கோவை முதலிடம்!

காரைக்குடியில் மாநில அளவிலான சைக்கிளிங் ரேஸ் போட்டியில், கோவை மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 49 வது தமிழ்நாடு மாநில அளவிலான சைக்கிளிங் ரோடு ரேஸ் போட்டி கல்லூரி சாலையில் தொடங்கி நடைபெற்றது.

இதில் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 15  KM தூரம் நடைபெற்ற போட்டியில், முதல் நான்கு இடங்களையும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நிரஞ்சன், அபினவ், நரேன் ஆதர்ஷ், சுகேஷ் உள்ளிட்ட மாணவர்கள், கைப்பற்றி வெற்றி பெற்றனர்.

அதுபோல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கு  8.KM தூரம் நடைபெற்ற போட்டியில், கோவை மாவட்ட மாணவி சும்ரிதி முதலாம் இடத்தையும் சிவகங்கை மாவட்ட மாணவி சரிகா ஸ்ரீ இரண்டாம் இடத்தையும் கரூர் மாவட்ட மாணவி கீர்த்தி ஸ்ரீ  மூன்றாம் இடத்திதையும் பிடித்து அசத்தியுள்ளார்.

இதையும் படிக்க || "ஊழலை விட, சாதி மற்றும் போதை சமூகத்தை பாதிக்கும்" தொல். திருமாவளவன் பேச்சு!