ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றார் டூட்டி சந்த்... மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் வாழ்த்து...

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு டூட்டி சந்த் தகுதி பெற்றுள்ளார்.

ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றார் டூட்டி சந்த்... மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் வாழ்த்து...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவின் தடகள வீராங்கனை டூட்டி சந்த் தகுதி பெற்றுள்ளார். கொரோனா தாக்கத்துக்கு மத்தியில்  ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23- ஆம் தேதி  தொடங்கி ஆகஸ்டு 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
 
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளை தேர்ந்தெடுக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்தியா சார்பில் தடகள வீராங்கனை டூட்டி சந்த் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் பங்கேற்க தகுதி பெற்றுள்ளதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் உலக தரவரிசையின் அடிப்படையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய தடகள வீராங்கனை  டூட்டி சந்த்துக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.