இந்திய அணியில் மீண்டும் அஸ்வினுக்கு வாய்ப்பு இல்லை!!! டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் தேர்வு...

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ள நிலையில் இந்திய அணியில் நட்சத்திர வீரர் அஸ்வின் வாய்ப்பு வழங்கததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  

இந்திய அணியில் மீண்டும் அஸ்வினுக்கு வாய்ப்பு இல்லை!!! டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் தேர்வு...

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட், டிராவில் முடிந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

 இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் இசாந்த் சர்மா, மற்றும் முகமது சமிக்குக் பதிலாக ஷர்தூல் தாகூர் மற்றும் உமேஷ் யாதவ் இடம்பிடித்துள்ளனர்.

 இந்த நிலையில் காயத்தால் அவதியடைந்து வந்த ஜடேஜாவுக்கு பதிலாக அஸ்வின் களமிறங்குவார் என இந்திய ரசிகர்கள் எதிர்பாத்த நிலையில், மீண்டும் ஜடேஜாவுக்கே வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இங்கிலாந்து தொடர் முழுவதும் அஸ்வினுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதால் ரசிகர்களிடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.