நான் இன்னும் சென்னை அணியை விட்டு செல்லவில்லை... எதிர்கால திட்டம் பற்றி பேசிய கேப்டன் தோனி பேட்டி...

தாம் இன்னும் சென்னை அணியை விட்டு செல்லவில்லை என, சி.எஸ்.கே. அணி கேப்டன் தோனி கூறியுள்ளார்.

நான் இன்னும் சென்னை அணியை விட்டு செல்லவில்லை... எதிர்கால திட்டம் பற்றி பேசிய கேப்டன் தோனி பேட்டி...

துபாயில் நடைபெற்ற ஐ.பி.எல். இறுதிப்போட்டியில், கொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றி குறித்து பேட்டியளித்த சென்னை அணி கேப்டன் தோனியிடம், அவரது எதிர்கால திட்டம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. 

இதற்கு பதிலளித்த அவர், அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் 2 புதிய அணிகள் வர உள்ள நிலையில், பி.சி.சி.ஐ. எடுக்கும் முடிவை பொறுத்து தமது எதிர்கால திட்டம் அமையும் என கூறியுள்ளார். சென்னை அணியுடன் எதிர்கால தொடர்பு எவ்வாறு இருக்கும்? என்ற கேள்விக்கு, சென்னை அணிக்காக தாம் விளையாடுவது என்பதை விட, சென்னை அணிக்கு எது சிறந்தது என்பதை தான் பார்க்க வேண்டும் என தோனி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சென்னை அணியில் நீங்கள் விட்டு சென்ற மரபு குறித்து பெருமைப்படுகிறீர்களா? என கேள்வி எழுப்பியபோது, தாம் இன்னும் சென்னை அணியை விட்டுச் செல்லவில்லை என சிரித்து கொண்டே கேப்டன் தோனி பதில் அளித்துள்ளார்.