சீன வீராங்கனையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் பி.வி. சிந்து!!

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில்,  இந்தியாவின் பி.வி. சிந்து சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

சீன வீராங்கனையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் பி.வி. சிந்து!!

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில், இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீன வீராங்கனை வாங் ஜி யீயை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த போட்டியில், முதல் செட்டை பி.வி.சிந்து கைப்பற்றிய நிலையில், இரண்டாவது செட்டை வாங் ஜி கைப்பற்றி அதிர்ச்சி கொடுத்தார்.

இதனால் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட், மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில் அபாரமாக விளையாடிய பி.வி. சிந்து,  3வது செட்டைக் கைப்பற்றி, சிங்கப்பூர் ஓபன் பட்டத்தை வென்று அசத்தினார்.

இந்த ஆண்டில் மட்டும் சையத் மோடி இன்டர்நேஷனல் மற்றும் சுவிஸ் ஓபன் என இரண்டு சூப்பர் 300 பட்டங்களை வென்றுள்ள பி.வி.சிந்து, சிங்கப்பூர் ஓபனில் வெற்றி பெற்றதை அடுத்து, இந்த சீசனில் முதல் சூப்பர் 500 பட்டத்தை வென்றார்.