சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியா ஆதிக்கம்... பி.வி.சிந்து, சாய்னா நெஹ்வால், எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்!!

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெஹ்வால் மற்றும் எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியா ஆதிக்கம்...  பி.வி.சிந்து, சாய்னா நெஹ்வால்,  எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்!!

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில், காலிறுதிக்கு முந்தைய 2வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், வியட்நாம் வீராங்கனையுடன் மோதிய பி.வி.சிந்து 19-21 என முதல் செட்டை இழந்தாலும், பின்னர் 21-19, 21-18 என்று அடுத்த இரு செட்களை கைப்பற்றி வெற்றி பெற்றார். இதன் மூலம் பி.வி.சிந்து காலிறுதிக்கு போட்டிக்கு தகுதி பெற்றார்.

இதேபோல், சீன வீராங்கனை ஹி பிங் ஜியோவுடன் மோதிய சாய்னா நெஹ்வால், 58 நிமிடங்கள் போராடி 21-19, 11-21, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். சமீப காலமாக சர்வதேச போட்டியில் பெரிதாக சோபிக்காத சாய்னா, நீண்ட நாட்களுக்கு பிறகு சர்வதேச ஆட்டத்தில், காலிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய், சீன தைபே வீரர் சோ டின் சென்னுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் 14-21, 22-20, 21-18 என்ற செட்களில் பிரணாய் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். அதேபோல், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன், துருவ் கபிலா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.