எங்கள் வீரர்களை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது: ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு...

எங்கள் வீரர்களை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது என்று ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி  தோல்வி குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

எங்கள் வீரர்களை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது: ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு...

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆடவர் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்தியா - பெல்ஜியம் அணிகள் மோதின. இதில் பெல்ஜியம் அணி 5-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. இதனால் இந்திய ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். ஆனாலும் அரையிறுதி வரை சென்று போராடி தோல்வியடைந்த இந்தியாவுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் இது குறித்து  தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடிவெற்றி, தோல்வி வாழ்க்கையின் ஒரு பகுதி.  டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் அணி தங்களால் முடிந்ததை வழங்கியது, அது தான் முக்கியம். அடுத்த போட்டி மற்றும் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள். எங்கள் வீரர்களை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது என தெரிவித்துள்ளார்.