2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : தோல்வியை தவிர்க்க போராடி வரும் இந்திய அணி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோல்வியை தவிர்க்க, இந்திய அணி கடுமையாக போராடி வருகிறது.

2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : தோல்வியை தவிர்க்க போராடி வரும் இந்திய அணி

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 202 ரன்களும், தென்னாப்பிரிக்கா 229 ரன்களும் எடுத்தன. 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி, 266 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ரகானே 58 ரன்களும், புஜாரா 53 ரன்களும், ஹனுமா விகாரி 40 ரன்களும் சேர்த்தனர்.

இதனையடுத்து, 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மார்க்ராம் 31 ரன்களும், பீட்டர்சன் 28 ரன்களும் சேர்க்க, 3-ம் நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் எல்கர் 46 ரன்களுடனும், துசன் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற இன்னும் 122 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், அந்த அணியின் கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ளன. இதனால் தோல்வியை தவிர்க்க இந்திய அணி கடுமையாக போராடி வருகிறது.