"சிஎஸ்கே-வுக்கு ஆட்டம் காட்டிய கேகேஆர்".. 5-ஜே பேர் தான் மொத்த டீமும் கிளோஸ்!!

நடப்பாண்டு ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் செனையை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது.

"சிஎஸ்கே-வுக்கு ஆட்டம் காட்டிய கேகேஆர்".. 5-ஜே பேர் தான் மொத்த டீமும் கிளோஸ்!!

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டில் உதயமானது. ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள ஐ.பி.எல். ஆண்டுதோறும் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படுகிறது.

இதன்படி 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் நேற்று தொடங்கியது. 2022- ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ரன் எதுவும் இன்றி ஆட்டமிழந்து  ஏமாற்றம் அளித்தார்.  மற்றொரு வீரர்  கான்வேயும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனால், சென்னை அணியின் ரன்வேகம் ஆமை வேகத்தில் சென்றது. கடைசி கட்ட ஓவர்களில் டோனி அதிரடி காட்டி ரசிகர்களை மகிழ்வித்தார். இதனால், சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 131  ரன்கள் எடுத்தது. டோனி  38  பந்துகளில்  50  ரன்களுடனும் ஜடேஜா  28 பந்துகளில் 26 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியின் துவக்க வீரர்களாக ரஹானே மற்றும் வெங்கடேஷ் களமிறங்கினர். வெங்கடேஷ் 16 ரன்னில் அவுட் ஆனார். அதிரடியாக ஆடிய ரஹானே 34 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார்.

அடுத்து வந்த நிதிஷ் ரானா 21 ரன்னில் வெளியேறினார். சாம் பிள்ளிங்ஸ் 25 ரன்னில் வெளியேறினார்.  இறுதியில் கொல்கத்தா அணி 18 புள்ளி 3 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னையை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றிபெற்றது. அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் 20 ரன்னுடனும், ஜாக்சன் 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். சென்னை அணியின் பிராவோ அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.