விறுவிறுப்பாக நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ்...3வது சுற்றுக்கு முன்னேறிய வீரர்கள்!

விறுவிறுப்பாக நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ்...3வது சுற்றுக்கு முன்னேறிய வீரர்கள்!

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் உலகின் முன்னணி வீரர்களான ஜோகோவிச், ஸ்வியாடெக் ஆகியோா் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனா். 

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா வீரா் தாம்சனை எதிர்கொண்ட செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்  6-3, 7-6, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினாா்.

இதையும் படிக்க : பரபரப்புக்கு மத்தியில் கூடுகிறது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம்...!

மகளிர் ஒற்றையர் பிரிவில், 2-வது சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை சாரா சொரிபெஸ் டார்மோவை போலந்தை சோ்ந்த இகா ஸ்வியாடெக் 6-2, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 

ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இன்றைய போட்டியில், பிரான்ஸ் வீரா் அட்ரியன் மன்னாரினோவுடன் மெத்வதேவும், ரஷ்ய வீரா் ஆண்டி ரூப்லெவ், அஸ்லான் கரட்சேவுடனும் மோத உள்ளனர்.

இதேபோல் மகளிர் ஒற்றையர் பிரிவில், நடப்பு சாம்பியனான எலினா ரைபாகினா இரண்டாவது சுற்றில் பிரான்சின் அலிஸ் கார்னெட்டை எதிா்கொள்கிறாா்.