டோக்கியோ பாரலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்க பதக்கம்...

டோக்கியோ பாரலிம்பிக் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் தங்கம் வென்றுள்ளார். 

டோக்கியோ பாரலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்க பதக்கம்...

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரலிம்பிக் போட்டி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் பயனாக தற்போது வரை 18 பதக்கங்கள் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.

இந்தநிலையில் இன்று நடைபெற்ற பேட்மின்டன் ஆடவர் ஒற்றையர் SH6 பிரிவு போட்டியில்,  இந்திய வீரர் கிருஷ்ண நாகர் ஹாங்காங் வீரர் சூ மான் காயை எதிர்கொண்டார். முதல் செட்டை 21க்கு 17 என கைப்பற்றிய அவர், 2வது சுற்றில் போராடி தோல்வியை தழுவினார். இருப்பினும் மனந்தளராது தொடர்ந்து விளையாடி 3வது செட்டில் 21 க்கு 17 என மான் காயை வீழ்த்தி, தங்கத்தை உறுதி செய்தார். தங்கம் பெற்று தந்த சாகருக்கு உறவினர்கள், தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.