தொடர்ச்சியாக 3 செட்...வெறித்தனமான ஆட்டத்தால் 3வது சுற்றில் ரஃபேல் நடால்!

தொடர்ச்சியாக 3 செட்...வெறித்தனமான ஆட்டத்தால் 3வது சுற்றில் ரஃபேல் நடால்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

ரஃபேல் நடாலின் வெறித்தனமான ஆட்டம்:

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர், நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று நடைபெற்ற ஆடவர் பிரிவு இரண்டாவது சுற்று ஆட்டத்தில், உலகத்தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால், இத்தாலி வீரர் ஃபோக்னினியை எதிர் கொண்டார்.

இதையும் படிக்க: மீண்டும் மீண்டும் ரிப்பீட்...ஐகோர்ட் தீர்ப்பால்...பறிபோன ஜெயலலிதாவின் பதவி...!

இதில், முதல் செட்டை இழந்த நடால், பின்னர் வந்து தொடர்ச்சியாக 3 செட்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றார். 2-6, 6-4, 6-2 , 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற ரஃபேல் நடால், மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூபலெவ்:

அதேபோல், மற்றொரு ஆடவர் இரண்டாவது சுற்று ஆட்டத்தில், ரஷ்யாவின் ரூபலேவ், தெற்கு கொரியாவைச் சேர்ந்த க்வோன் சூன் வூவை எதிர்கொண்டார். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூபலெவ், 6-3, 6-0, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 3வது சுற்றுக்குள் நுழைந்தார்.