விம்பிள்டன் டென்னில் தொடர்... ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி...

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் 3-வது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரர் ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

விம்பிள்டன் டென்னில் தொடர்... ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி...
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல்நிலை வீரரும், 19 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவருமான ஜோகோவிச் (செர்பியா) 3-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த டெனிஸ் குட்லாவை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-4, 6-3, 7-6 (9-7) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
 
மற்ற ஆட்டங்களில் 5-ம் நிலை வீரரான ஆந்த்ரே ருபலே (ரஷ்யா), அகுட் (ஸ்பெயின்) ஆகியோர் வெற்றி பெற்றனர். மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) தோற்றார். காயத்தால் நீண்ட இடைவெளிக்கு பிறகு களம் இறங்கிய அவர் 4-6, 2-6, 2-6 என்ற கணக்கில் கனடா வீரர் டெனிசிடம் தோற்றார்.
 
இதைப்போல 9-வது வரிசையில் உள்ள டியாகோ ஸ்வார்ட்ஸ்மேன் (அர்ஜென்டினா) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் 13-வது வரிசையில் உள்ள மெர்ட்டன்ஸ் (பெல்ஜியம்), 11-வது இடத்தில் உள்ள முகுருஜா (ஸ்பெயின்) ஆகியோர் அதிர்ச்சிகரமாக தோற்றனர். மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா), ரைபகினா (கஜகஸ்தான்) ஆகியோர் வெற்றிபெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.