தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 202 ரன்களுக்கு ஆட்டம் இழப்பு...

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்கா அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்துள்ளது.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான  2வது டெஸ்ட் போட்டியில் 202 ரன்களுக்கு  ஆட்டம் இழப்பு...

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் உள்ள வான்டரெர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து, முதலில் களம் இறங்கி விளையாடியது. 

தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். ஒருபுறம் விக்கெட்டுகள் மளமளவென சரிய, மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய கேப்டன் கே.எல்.ராகுல், அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் இந்திய அணி, தமது முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணி தமது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. முதல்நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்துள்ளது. மார்க்ரம் 7 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் டீன் எல்கார் 11 ரன்களுடனும், கீகன் பீட்டர்சன் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியாவை விட தென்னாப்பிரிக்கா அணி 167 ரன்கள் பின் தங்கியுள்ள நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.