தமிழகத்தில் நீட் தேர்வு எழுத 1.42 லட்சம் பேர் விண்ணப்பம் - தேசிய தேர்வு முகமை

நீட் தேர்வு எழுத தமிழகத்தில் 1 லட்சத்து 42 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வு எழுத 1.42 லட்சம் பேர் விண்ணப்பம் -  தேசிய தேர்வு முகமை

நீட் தோ்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி தொடங்கியது.

மே மாதம் 6-ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் மே 20 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை முதல்முறையாக 18 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக தேசிய தோ்வுகள் முகமை தெரிவித்துள்ளது. இதேபோல தமிழகத்தில் நீட் தேர்வு எழுத 1 லட்சத்து 42 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றும், தமிழில் நீட் தேர்வு எழுத 31 ஆயிரத்து 803 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.