கூட்டுறவு வங்கிகளில் 100% நகைக்கடன் தள்ளுபடி - ஐ.பெரியசாமி

100 சதவீத நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி  தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு வங்கிகளில் 100% நகைக்கடன் தள்ளுபடி - ஐ.பெரியசாமி

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குட்பட்டு அடமானம் வைத்த நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து வங்கிகளில் மேற்கொண்ட ஆய்வில் போலி நகைகள் வைத்து முறைகேடாக நகைக்கடன் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து தகுதியான நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் மற்றும் நகைகள் பயனாளிகளுக்கு திருப்பி அளிக்கப்பட்டு வந்தது. அந்தவகையில்  5 ஆயிரத்து 13 கோடி ரூபாய்  அளவிற்கான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கு உட்பட்ட நகைக் கடன் பெற்ற பயனாளிகளுக்கு 100 சதவீதம் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.