முதலமைச்சரின் இலவச பேருந்து திட்டத்தால்...250 கோடி பேர் பயனடைந்துள்ளனர் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

முதலமைச்சரின் இலவச பேருந்து திட்டத்தால்...250 கோடி பேர் பயனடைந்துள்ளனர் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

முதலமைச்சர் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டத்தினை அறிமுகப்படுத்தியதால் 250 கோடி பேர் பயனடைந்துள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தனியார் பள்ளியின் 30வது ஆண்டு விழாவில் தமிழக வேளாண்மை மற்றும் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இதையும் படிக்க : வட மாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை...வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை...தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!

பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டத்தினை அறிமுகப்படுத்தியால் 250 கோடி பேர் பயனடைந்துவருகின்றனர். 

அந்த வகையில், மகளிருக்கு விரைவில் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.