மே மாதம் 1000 ரூபாய் பாஸ் பெற்றவர்களுக்கு சிறப்பு சலுகை அறிவிப்பு
மே மாதம் 1000 ரூபாய் பாஸ் பெற்று இருந்தவர்கள், அதனை ஜூலை மாதம் 15 ஆம் தேதி வரை பயன்படுத்தலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் குறைந்ததையடுத்து ஊரடங்கில் கூடுதல் தளர்வு அளிக்கப்பட்டு தமிழக அரசு அறிவிக்கப்பட்டது.
இதனால் இன்று முதல் 50 சதவீத இருக்கையுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன, சென்னை பல்லவன் சாலையில் உள்ள மத்திய பனிமலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து செயல்படலாம் என தமிழக முதல்வர் அறிவித்து இருந்தார்.
அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி பேருந்துகள் 1800 பேருந்துகள் செயல்படுகிறது என்றும், மக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் அதிகரிக்கப்படும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மே மாதம் 1000 ரூபாய் பாஸ் பெற்று இருந்தவர்கள், அதனை ஜூலை மாதம் 15ஆம் தேதி வரை பயன்படுத்தலாம் என்று அறிவித்தும், இரவு 9. 30 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும் எனவும் கூறினார்.
இந்நிலையில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். அதேபோல் மாற்று திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் புதன்கிழமை துவங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.