நடுக்கடலில் வைத்து ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு... அச்சத்துடன் கரையில் காத்திருக்கும் மீனவர்களின் குடும்பங்கள்!!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்ததால், பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

நடுக்கடலில் வைத்து ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு...  அச்சத்துடன் கரையில் காத்திருக்கும் மீனவர்களின் குடும்பங்கள்!!

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து அனுமதிச்சீட்டு பெற்றுக் கொண்டு நேற்று சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது,  அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 12 மீனவர்களை சிறைப்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் பிடிப்பட்ட மீனவர்களை, நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படை தற்போது  விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் மீனவர்களின் இரண்டு விசை படகுகளை பறிமுதல் செய்து சிங்கள கடற்படை அட்டூழியத்தில்  ஈடுபட்டது மீனவ கிராமங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி  உள்ளது.