இலங்கை சிறையில் இருந்து 12 தமிழகம் மீனவா்கள் விடுவிப்பு..! 60 நாட்களாக சிறையில் படுதுயரம் அடைந்ததாக வேதனை..!

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 12 தமிழகம் மீனவா்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். 

இலங்கை சிறையில் இருந்து 12 தமிழகம் மீனவா்கள் விடுவிப்பு..! 60 நாட்களாக சிறையில் படுதுயரம் அடைந்ததாக வேதனை..!

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடித்து கொண்டு இருந்த போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கடந்த மார்ச் மாதம் 12 மீனவர்களை கைது செய்தனர்.

தகவலறிந்த மத்திய அரசின் உதவியுடன் தமிழக முதலமைச்சா் மேற்கொண்ட சீரிய முயற்சியால் இலங்கை சிறையில் கடந்த 60 நட்களுக்கு மேலாக அடைக்கப்பட்டிருந்த 12 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். 

இதையடுத்து இலங்கையில் இருந்து தமிழக மீனவர்களை இந்திய தூதரக அதிகாரிகள்  தலைநகரம் கொழும்பில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தில் அனுப்பி வைத்தனர். 

அதன்படி சென்னை விமான நிலையம் வந்தடைந்த 12 மீனவர்களையும் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.  பின் அவர்கள் அனைவரும் அவரவர் சொந்த ஊருக்கு வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மீனவர்கள், இலங்கை சிறையில் சொல்ல முடியாத அளவுக்கு துயரத்தை அனுபவித்ததாக வேதனை தெரிவித்தனர்.