உணவகத்தில் சாப்பிட்ட 12 வயது சிறுமி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், உணவகத்தில் சாப்பிட்ட 12 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உணவகத்தில் சாப்பிட்ட 12 வயது சிறுமி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காந்தி சாலையில்அசைவ உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இப்பகுதியில் மிகவும் பிரபலமான கடை என கூறப்படும் நிலையில், நாள்தோறும் ஏராளமானோர் இங்கு உணவருந்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஆரணி லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் தமது குடும்பத்தினருடன் உணவகத்தில் சாப்பிட்டுள்ளார்.

இவர்களை தொடர்ந்து ஆரணி ஷராப் பஜார் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன், சந்தியா, லட்சன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் சாப்பிட்டுள்ளனர். இதில், 12 பேருக்கும் மேற்பட்டோர் நேற்று திடீரென வாந்தி, மயக்கம் என உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆனந்தன் என்பவரது 12 வயது மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். தகவலறிந்து மருத்துவமனைக்கு சென்ற ஆரணி டிஎஸ்பி கோடீஸ்வரன் உணவகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.