தமிழில் 100-க்கு 138 ...! மதுரை மாணவிக்கு மதிப்பெண் சான்றிதழில் குழப்பம்..!

தமிழில் 100-க்கு 138 ...!    மதுரை மாணவிக்கு மதிப்பெண் சான்றிதழில் குழப்பம்..!

தமிழகமே எதிர்பார்த்த 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் மதுரை சேர்ந்த பெண்ணுக்கு மதிப்பெண் சான்றிதழில் குழப்பம்., தமிழில் 100க்கு 138., 600 க்கு 514 எடுத்தும் 4 பாடத்தில் தோல்வி என வந்ததால் அதிர்ச்சி....

தமிழ்நாடு எதிர்பார்த்து இருந்த 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில்., பல்வேறு மாணவ மாணவிகள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்தோம் 600 க்கு 600 மதிப்பெண் எடுத்தோம் சாதனை புரிந்திருந்தனர். அந்த வகையில்., மதுரை மாவட்டத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வில் 95.84% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் தேர்வு எழுதிய 34,753 பேரில்,  16,000 ஆண் மாணவர்களும், 17,306 பெண் மாணவர்களும் தேர்ச்சிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில்., மதுரை திருப்பரங்குன்றம் அருகே சூரக்குளம் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன்(26) ஆர்த்தி (19) தம்பதியினர். இதில் 2021-ல் ஆர்த்தி தனது 17 வயதில் பதினொன்றாம் வகுப்பை திருநகர் சீதாலட்சுமி பள்ளியில் முடித்து இருந்த நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக வேல்முருகனை திருமணம் செய்திருந்தார். தொடர்ந்து., குழந்தை திருமணம் செய்து கொண்டதால் இவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு தற்போது வரை வழக்கு நிலுவையில் உள்ளது.

மேலும்., தங்களது திருமண வாழ்க்கையினால் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக வேல்முருகன் தனது மனைவி ஆர்த்தியை 2023 இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுத முடிவு செய்து. திருப்பரங்குன்றம் தேவஸ்தான பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு முடித்த சான்றிதழில் காண்பித்து 2022-ல்சேர்த்து பொதுத் தேர்வு எழுதுவதற்கு அனுமதி வாங்கி பொதுதேர்வு நுழைவுச்சீட்டு (2400742) பெற்று கடந்த 2023 மார்ச் 13ஆம் தேதி திருமங்கலம் சென் பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளியில் எழுதினார்.

நேற்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ஆர்த்தியும் தனது கணவர் வேல்முருகனுடன் சேர்ந்து ஆன்லைனில் வெளியான தேர்வு முடிவை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதில்

தமிழில் 100 க்கு 138 மதிப்பெண்களும்.,

ஆங்கிலத்தில் 100க்கு 92 மதிப்பெண்களும்.,

கணிதத்தில் 100க்கு 56 மதிப்பெண்களும்.,

இயற்பியல் துறையில் 100க்கு 75 மதிப்பெண்களும்

வேதியல் துறையில் 100க்கு 71 மதிப்பெண்களும்

உயர்கணிதத்தில் 100க்கு 82 மதிப்பெண்களும் பெற்றதாக முடிவுகள் வெளியாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஆர்த்தி தனது ஆன்லைன் பொதுத்தேர்வு முடிவுகளை திருப்பரங்குன்றம் தேவஸ்தான பள்ளிக்கு எடுத்துச் சென்று காண்பித்த போது உரிய விளக்கம் அளிக்காமல் இருந்ததாகவும்., தமிழில் 90 மதிப்பெண்கள் தான் எழுத முடியும் ஆனால்., இவர்கள் 138 மதிப்பெண்கள் அளித்துள்ளனர். நான் தோற்றாலும் வெற்றி பெற்றாலும் என்னுடைய உண்மையான மதிப்பெண்களை தெரிந்தால் மட்டுமே உயர் கல்வியில் பயில முடியும், அல்லது மீண்டும் பொது தேர்வு எழுத முடியும்  என்றும் இப்படி எங்களை குழப்பத்தில் ஆழ்த்துவது போன்ற முடிவுகள் வெளியாகி இருப்பது தங்களுக்கு வேதனை அளித்துள்ளதாகவும் அதே போல் 600 க்கு 514 மதிப்பெண் எடுத்து நான்கு பாடத்தில் தோல்வி என்றும் வந்துள்ளதால் மிகவும் வேதனையில் இருப்பதாக தெரிவித்தார்.

இதயும் படிக்க     }  வந்துவிட்டது மஞ்சள் காய்ச்சல்...! தடுப்பூசி அவசியம்...! - பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை.