ரூ.14.5 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு...அமைச்சர் சொன்ன தகவல்!

ரூ.14.5 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு...அமைச்சர் சொன்ன தகவல்!

விழுப்புரம் மாவட்டம், பிள்ளைச்சாவடியில் 14 கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிய மீன் இறக்கு தலம் மற்றும் தூண்டில் வளைவு அமைக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

பாதிப்புகளை ஆய்வு செய்த அமைச்சர்: 

மாண்டஸ் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணா உதவிகளை வழங்கினார். 

தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை:

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, மாண்டஸ் புயல் காரணமாக விழுப்புரத்தில் 18 மிமீ மழை பதிவாகியுள்ளதாகவும், புயல் காரணமாக வீடுகளுக்கோ, கால்நடைகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் பயிர்சேதம் குறித்து ஆய்வு செய்யப்படும் எனகூறிய அவர், அப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையான தூண்டில் வளைவு அமைப்பதை ஏற்ற அரசு, இதற்காக 14.5 கோடியில் மீன் இறக்குதலம் மற்றும் கடல் அரிப்பை தடுக்கும் பணிகளுக்கு ஆணை பிறப்பித்து உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

இதையும் படிக்க: அரசின் சரியான திட்டமிடலால் மீண்ட தமிழகம்...முதலமைச்சர் பேட்டி!

மேலும் ஒப்பந்த பணிகள் முடிவடைந்து, களபணிகள் நாளை முதல் தொடங்க உள்ளதாக கூறிய அமைச்சர்பொன்முடி, உடனடியாக கல்சுவர் எழுப்பப்பட்டு கடல் அரிப்பை தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.