சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்...

திருச்சி நவல்பட்டு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான மணிகண்டனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கில்  கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்...

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பூமிநாதன், ஆடு திருடர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 8 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில், தஞ்சையை சேர்ந்த 10 வயது மற்றும் 17 வயது சிறுவர்கள், 19 வயது இளைஞர் மணிகண்டன் ஆகிய 3 பேரை சுற்றி வளைத்து, தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய போலீசார், மணிகண்டனை மட்டும் கீரனூர் நீதித்துறை நடுவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். அப்போது, அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து மணிகண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.