மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - இளைஞர் போக்சோவில் கைது

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - இளைஞர் போக்சோவில் கைது

 திருவிடைமருதூர் அருகேயுள்ள வாணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கர்ணன். சமையல் வேலை பார்த்து வரும் இவர், அதேபகுதியை சேர்ந்த  மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதை கவனித்த அப்பகுதி மக்கள் கர்ணனை பிடிக்க முயன்றபோது அவர் தப்பித்ததாக கூறப்படுகிறது.

இதனைதொடர்ந்து நேற்று இரவு கர்ணன் கும்பகோணம் அருகேயுள்ள கொட்டையூரில் நண்பர் வீட்டில் தங்கியிருந்ததை தெரிந்து கொண்ட பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் மற்றும் வாணாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் கர்ணனை பிடித்து அடித்ததாக கூறப்படுகிறது.

தகவலறிந்து வந்த திருவிடைமருதூர் காவல்துறையினர் கர்ணனை மீட்டு கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரை தொடர்ந்து கர்ணனை  போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்