முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் 2 மண்டபங்கள் - முதலமைச்சர் அறிவிப்பு!

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் இரண்டு மண்டபங்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் 2 மண்டபங்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேவர் ஜெயந்தி விழாவின் போது, கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும், வெயில் மழையிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையிலும், ஒரு கோடியே 42 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு மண்டம் அமைக்கப்படும் என கூறியுள்ளார்.

இதையும் படிக்க : நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் இராணுவ வீரர்...!

மேலும் முக்கிய பிரமுகர்கள் மரியாதை செலுத்த செல்லும் பாதையில் 12 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மற்றொரு மண்டபமும் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.