மெரினா கடற்கரைக்கு வந்தது விடிவுகாலம்.. தமிழக அரசின் அசத்தல் திட்டம்!

சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்த   20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். 

மெரினா கடற்கரைக்கு வந்தது விடிவுகாலம்.. தமிழக அரசின் அசத்தல் திட்டம்!

சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்த   20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன்,  சுற்றுச்சூழல் துறை குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அதில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பசுமை பூங்கா  அமைத்து, சாலை வசதியை மேம்படுத்த 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக கூறினார். அதேபோல் தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் மரம் நடுவதற்கு 50 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 32 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தபடும் என்றும் குறிப்பிட்டார்.