20 ஓவர் கிரிக்கெட் போட்டி.. "16 டீம்".. சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற "சென்னை எஸ்.பி.சி.சி" அணி!!
பொன்னேரியில் நடைபெற்ற டி-20 கிரிக்கெட் போட்டியில், சென்னை எஸ்.பி.சி.சி. அணி அபாரமாக விளையாடி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் ஸ்ரீதேவி கல்லூரியில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
சதீஷ் ஸ்போர்ட்ஸ் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில், சென்னை, திருவள்ளூர், வேலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாநில அளவில் தலை சிறந்த 16 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் சென்னை மாதவரம் எஸ்.பி. சி. சி. அணியும், சென்னை கொடுங்கையூர் யூ.எஃப். சி. சி. அணியும் மோதியது. முதலில் ஆடிய எஸ்.பி. சி. சி. அணி அபாரமாக விளையாடி 20 ஓவர்களில் 186 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய யூ.எஃப். சி. சி. அணி 20 ஓவர் முடிவில் 136 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் அத்திப்பேடு ஊராட் சி மன்றத் தலைவர் ரமேஷ் பங்கேற்று, சாம்பியன் பட்டம் வென்ற எஸ்.பி. சி. சி. அணிக்கு கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினார். அத்துடன், ஆட்ட நாயகன், தொடர் நாயகன், சிறந்த அணித்தலைவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.