மெகா தடுப்பூசி முகாமில் 22.52 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.........சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற 5 வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் மூலம் 22.52 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மெகா தடுப்பூசி முகாமில் 22.52 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.........சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொள்கின்றனர். இதுவரை 4 வாரங்களாக மெகா தடுப்பூசி முகாம் நிறைவடைந்த நிலையில், 5வது மெகா  தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது.  

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,  தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 24 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், 67 சதவீதம் பேர் முதல் தவணையும், 24 சதவீதம் பேர் 2-ம் தவணையும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக கூறினார்.

மேலும் பொதுமக்களிடம் முகக்கவசம் அணிவதில் கவனக்குறைவு இருப்பதாக தெரிவித்த அவர், பண்டிகை காலம் என்பதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என கூறினார்.