கிணற்றில் குளிக்க சென்ற 3 மாணவிகள் நீரில் முழ்கி பலி.!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே குளிக்கச் சென்ற மூன்று மாணவிகள் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிணற்றில் குளிக்க சென்ற 3 மாணவிகள் நீரில் முழ்கி பலி.!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைடுத்த போந்தை என்ற கிராமத்தில் திலகவதி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் அறுவடை பணி நடைபெற்றிருந்தது. அந்த நேரத்தில் அருகாகையில் இருந்த குட்டை கிணற்றில் திலகவதியின் மகள்களான ஹேமாவதி, கலையரசி, மற்றும் அதேபகுதியை சேர்ந்த ரவியின் மகளான சுபாஷினி மற்றும் மற்றொரு மாணவியாக செளந்தர்யா உட்பட நான்கு பேர் குளிப்பதற்கான சென்றுள்ளனர்.

குட்டை கிணற்றில் 4 பேரும் குளித்தக்கொண்டிருந்தநிலையில், ஹேமாவதி, கலையரசி மற்றும் சுமாஷினி ஆகிய மூவரும் நீச்சல் தெரியாமல் நீரில் முழ்கி உள்ளனர். இதனை பாஎத்த செளந்தர்யா சத்தம் போடவே அருகில் இருந்த விவசாயிகள் அந்த கிணற்றில் முழ்கிய மாணவிகளை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மாணவிகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மூவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.