தமிழ்நாட்டில் ஒரே நாளில் 303 பேருக்கு கொரோனா...!!

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 303 பேருக்கு கொரோனா...!!

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 303 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

இந்தியாவெங்கும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் தமிழ்நாட்டில் ஒரே நாளில் 303 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, "தமிழ்நாட்டில் ஒரே நாளில் 303 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 101 பேருக்கும், செங்கல்பட்டில் 29 பேருக்கும், கன்னியாகுமரியில் 26 பேருக்கும், கோவையில் 22 பேருக்கும், திருவள்ளூர் மற்றும் சேலத்தில் தலா 15 பேருக்கும் மற்றும் இங்கிலாந்தில் இருந்து வந்த 3 பேருக்கும், சிங்கப்பூரில் இருந்து வந்த ஒருவருக்கும் என மொத்தம் 32 மாவட்டங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதே சமயத்தில் 6 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படவில்லை" எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில், தமிழ்நாட்டில் போதிய அளவில் மருந்துகள் கையிருப்பு உள்ளதாகவும், அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் மேலும், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தனிமனித பாதிப்பாகவே உள்ளதாகவும்  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.